திருச்சி: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டிற்குள்ளேயே வெட்டிக் கொலை
திருச்சி: திருச்சி அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அவரது வீட்டிற்குள்ளேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தில் வசித்து வந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ வங்கி மேளாளர்.
இன்று காலையில் இவரது வீட்டிற்கு காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீடு வாடகைக்கு வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களிடம் ரத்தினம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்கள் ரத்தினத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மர்மநபர்கள் தாங்கள் வந்த காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சொத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற கார் மூலம் துப்பு கிடைக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.