தேனி அதிமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு முன்னாள் எம்.பி. ரித்தீஷ் வாழ்த்து !
தேனி: தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவரான தேனி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனுக்கு நடிகரும், முன்னாள் எம்.பிமான ரித்தீ்ஷ் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் தேனி அ.தி.மு.க. வேட்பாளர் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 16 வது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 16 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், தமிழகத்தில் அ.தி.மு.க. 39 இடங்களில் போட்டியிட்டது. இதில் அதிமுக வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றனர். மேலும், இந்த இந்திய அளவில் அதிமுக 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இதில், அதிமுக சார்பில் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டவர் பார்த்திபன். இவர், தனக்கு அடுத்தபடியாக வந்த தி.மு.க. வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை விட 3,14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
(இந்த தொகுதியில் மொத்த வாக்குகள் 14,33,099. பதிவான வாக்குகள் 10,75,382. இதில் பார்த்திபன் (அ.தி.மு.க.) 5,71,254, பொன்முத்துராமலிங்கம் (தி.மு.க.) 2,56,722, அழகு சுந்தரம் (ம.தி.மு.க.) 1,34,362, ஆரூண் (காங்கிரஸ்) 71,432 வாக்குகள் பெற்றனர்)
இந்த நிலையில், தென் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் பார்த்திபனுக்கு, நடிகரும், முன்னாள் இரமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு பார்த்திபன் , ரித்தீஷ்க்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.