ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் - நடத்தை விதிகள் அமல்
ஆர்.கே. நகரில் தேர்தல் நடததும் அதிகாரியாக ஆதி திராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே. வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக கே.வேலுச்சாமியை நியமனம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவர்களாக முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து காலியாக உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.
தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் யார் யார் என்று அரசியல் கட்சியினர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.