ஆர்.கே நகர் இடை தேர்தல்: சென்னை டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவ்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்ட மது கடைகளுக்கு ஏப்ரல் 10 முதல் 12 வரையும், 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்ட மது கடைகளுக்கு ஏப்ரல் 10 முதல் 12 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு என்னும் நாளான ஏப்ரல் 15 ம் தேதியும் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக இரு அணிகளும், திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.
அனல் பறக்கும் பிரச்சாரம், வாக்காளர்கள் சந்திப்பு என வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆர்.கே. நகரில் வலம் வந்து கொண்டுள்ளனர். இன்னும் 7 தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பணப்பட்டுவாடா பற்றி புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஏப்ரல் 15ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நட்சத்திர ஹோட்கள், பார்களிலும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.