சென்னை மகேந்திரா சிட்டி அருகே விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ்,23, யுவராஜ்,22 ஆகியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதில், நண்பர்கள் இருவரும் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அச்சரப்பாக்கம் மாதா கோயிலுக்கு சென்று விட்டு நண்பர்கள் இருவரும் திரும்பிய போது விபத்து நிகழ்ந்ததகாவும், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நண்பர்கள் இருவரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசராணை மேற்கொண்டனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.