For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்டங்கண்ட அண்ணா சாலை.. தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மறியல்!

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் எழுச்சி இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழர் எழுச்சி இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Road roko in Anna salai to support farmers

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கூடினர். அந்த சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவான கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

இன்று காலை கிண்டி கத்திபாரா பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை இளைஞர்கள் நடத்தியதை தொடர்ந்து செனனையில் ஆங்காங்கே மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamizhar Ezhucchi movement protest road roko in Anna salai to fullfil the farmers demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X