விருகம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்.. பதற்றம்
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
நெல்லையை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரை போலீஸார் தேடி வந்தனர்.
மேலும் நெல்லையில் கொல்லப்பட்ட பேராசிரியர் செந்தில்குமார் கொலையில் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜாவும் அவரது கூட்டாளிகளும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
வீடியோ
இதையடுத்து அவரை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் தன்னை என்கவுன்ட்டர் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக ராக்கெட் ராஜா ஒரு வீடியோவை வெளியிட்டார்.
பதற்றம்
இதை கருத்தில் கொண்டு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
பதற்றம்
ராக்கெட் ராஜாவை தங்களிடம் காட்டுமாறு அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ராக்கெட் ராஜா கைதானதால் தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. நாடார் சமூகத்து மக்களுக்கு ஆதரவாக இருந்ததால் ராஜாவை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.
சென்னையில் பதுங்கல்
இந்நிலையில் அவரது நடமாட்டத்தை உளவுத்துறை மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் சென்னையில் பதுங்கியிருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடன் நெல்லை வடக்கு பால பாக்கியம் நகரை சேர்ந்த சுந்தர், பிரகாஷ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி திருநகரை சேர்ந்த ராஜ்சுந்தர், தூத்துக்குடி நடுபட்டு வடக்கு தெருவைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.