எல்லாரும் போய்ட்டு மே 16ம் தேதிக்குப் பிறகு வாங்கப்பா... புதுவையிலிருந்து வெளியேற்றப்பட்ட 415 ரவுடிக
புதுச்சேரி: புதுவையில் வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக 415 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் பதற்றமான மற்றும் ரவுடிகள் மிகுந்த பகுதிகளில் ராணுவத்தினரை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 415 ரவுடிகள் புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற உள்ளதாகவும் சந்திரன் தெரிவித்தார். மது பாட்டில்கள், கடத்துவதை தடுக்க இரவு நேரத்தில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி கருத்தை அடுத்து புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் 415 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.