For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவுடி பல்பு குமாரை நிர்வாணப்படுத்தி கொன்ற சொறி விஜய் டீம் - கொலையில் முடிந்த பாம்பு சண்டை

சென்னையில், ரவுடி பல்பு குமாரை நிர்வாணமாக ஓட விட்டு கல்லால் அடித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ரவுடியை கைது செய்த போலீஸ் ரவுடி சொறி விஜய் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரவுடி பல்பு குமாரை நிர்வாணப்படுத்தி கொன்ற சொறி விஜய் டீம்- வீடியோ

    சென்னை: திருவல்லிக்கேணியில் ரவுடி பல்புகுமாரை நிர்வாணமாக ஓட விட்டு கல்லால் அடித்து கொன்றுள்ளனர் ரவுடி சொறி விஜய் குரூப். இந்த கொலை தொடர்பாக சொறி விஜய் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவல்லிக்கேணி - விக்டோரியா விடுதி அருகே ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பது குறித்து அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்கு கிடைத்தது. கால்வாய் தெருவில் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர்.

    விசாரணையில், கொல்லப்பட்டவர் ரவுடி பல்பு குமார் என்பதும், ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி கற்களை வீசி தாக்கியதும் தெரியவந்தது. கீழே விழுந்த பல்பு குமாரின் தலையை நசுக்கி, அந்த கும்பல் கொடூரமாகக் கொன்றதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக, பிரசாந்த் என்ற மற்றொரு ரவுடியை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    கொலையான பல்பு குமார்

    கொலையான பல்பு குமார்

    சொறி விஜய்யுடனான மோதல் காரணமாகவே, பல்பு குமார் திருவல்லிக்கேணியிலிருந்த வீட்டை பட்டினப்பாக்கத்துக்கு மாற்றியதாகவும், சொறி விஜய் தற்போது வேறொரு வழக்கில் சிறையில் இருப்பதால் நண்பர்களைச் சந்திக்க வந்தபோது கொலையுண்டதும் தெரியவந்துள்ளது.

    போதையில் நடந்த சண்டை

    போதையில் நடந்த சண்டை

    தென் சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களாக சுற்றி வந்த ரவுடிகள் பல்பு குமார், சொறி விஜய். கடந்த ஆண்டு போதையில் இருந்த போது மைதானத்தில் இருந்த பாம்பு குட்டியை எடுத்து பல்பு குமார் மீது வீசினான் சொறி விஜய், இதில் பல்பு குமார் கீழே விழுந்தான்.

    சண்டை போட்ட ரவுடிகள்

    சண்டை போட்ட ரவுடிகள்

    ஏரியாவில் இருந்த பெண்கள் சிரிக்கவே அவமானம் தாங்க முடியாமல் பல்பு குமார், சொறி விஜயை தாக்கினான். இந்த சண்டை மோதலானது. ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைதானார்கள்.

    வீடு மாறிய பல்பு

    வீடு மாறிய பல்பு

    தென்சென்னையில் இருவரும் எதிர் எதிர் கோஷ்டியாக செயல்பட்டு வந்தார்கள். பல்புகுமார் மீது சொறிவிஜய் ஆட்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தவே தப்பிய பல்புகுமார் பட்டிணம்பாக்கம் சீனிவாசா நகருக்கு வீட்டை மாற்றிக்கொண்டான்.

    ஓடவிட்டு கல்லால் அடித்தனர்

    ஓடவிட்டு கல்லால் அடித்தனர்

    கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய சொறி விஜய் சிறையில் அடைக்கப்படவே மீண்டும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்புகுமார் சுற்றினான். இதைப்பார்த்தை சொறி விஜய் ஆட்கள் விக்டோரியா கல்லூரியில் வைத்து பல்புகுமாரை நிர்வாணப்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

    கூட்டாளிகளை தேடும் போலீஸ்

    கூட்டாளிகளை தேடும் போலீஸ்

    தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் தொடர்புடைய சொறி விஜயின் கூட்டாளியான பிரசாந்தை கைது செய்தனர். கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    English summary
    Rowdy sheeter Bulb Kumar was brutally murdered by his colleague Sori Vijay gang in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X