உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் தப்பியோட்டம்.. போலீசார் வலைவீ
சென்னையில் உட்லண்ட்ஸ் திரையரங்கில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரவுடி பாலகிருஷ்ணன் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
சென்னை திருவான்மியூர் வள்ளுவர் தெருவில் பாலகிருஷ்ணன் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா வழக்குகள் பல ஏற்கனவே உள்ளது. பல அடிதடி வழக்குகளும் உள்ளன. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி முருகனுக்கும் இவருக்கும் தொழில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்திற்கு திரைப்படம் பார்க்க பாலகிருஷ்ணன் சென்றுள்ளார். இவரை நோட்டமிட்டவாறே திரையரங்கத்திற்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது.
இது தெரியாமல் திரையரங்க வளாகத்தில் பாலகிருஷ்ணன் நின்று கொண்டிருந்த போது அந்த மர்ம கும்பல் அவரை திடீரென தாக்கியது. நிலைகுலைந்த ரவுடி பாலகிருஷ்ணனை மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.