For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவுடி பினு போட்டுத் தள்ள பிளான் செய்த ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் சரண்

ரவுடி பினு கொலை செய்யத் திட்டமிட்டுருந்த ராதாகிருஷ்ணன் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சேலம் : கடந்த வாரம் போலீஸில் சரணடைந்த ரவுடி பினுவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி பினு கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிரடியாகச் செயல்பட்டு அங்கிருந்து 76 ரவுடிகளைக் கைது செய்தனர்.

 Rowdy Radhakrishnan surrender on salem Court

ரவுடி பினு அங்கிருந்து தப்பித்த நிலையில் சில தினங்களுக்குப் பிறகு போலீஸில் சரணடைந்தார். பினுவின் எதிர்க்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் போட்டுத்தள்ள ரவுடிகள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து தலைமறைவான ரவுடி ராதாகிருஷ்ணனையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். அவர் மீது 9 கொலை வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், எப்படியாவது கைது செய்து விடவேண்டும் என்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ரவுடி ராதாகிருஷ்ணனை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவலை தெரிந்து கொண்ட ராதாகிருஷ்ணன் இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து சென்னை போலீஸார் சேலம் விரைந்துள்ளனர். ரவுடி ராதாகிருஷ்ணன் 35 வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

English summary
Rowdy Radhakrishnan surrender on salem Court. Earlier 76 Gangsters were arrested on Rowdy Binu Birthday party and Binu got surrendered in Chennai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X