For Daily Alerts
Just In
சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ. 2 கோடி பறிமுதல்
சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: வேளச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பணம் சிக்கியது.
வேளச்சேரியை சேர்ந்தவர் தமிழன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ. 2 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது டிராவல்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.
போலீஸார் கைப்பற்றிய ரூ.2 கோடியை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பர் என தெரிகிறது.
Comments
English summary
Police raids in Travel agency's owner's house in Chennai Velacherry. They also seized Rs. 2 Crores and handed over the amount to IT department.
Story first published: Tuesday, September 5, 2017, 8:39 [IST]