ரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் நடத்தப்பட்ட ரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்ட ரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வந்தது கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம்.
ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகளை செய்து, ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதனால் அப்போது டெண்டர் நிறுத்தப்பட்டது. அதன்பின் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது.
ஆனால் இதை எதிர்த்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தொடர்ந்து வழக்கு தொடுத்தனர். அவர் தொடர்ந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை. பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்டதால் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 20-ஆம் தேதி வரை டெண்டர் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.