For Quick Alerts
For Daily Alerts
Just In
பட்ஜெட்டில் சிறைத்துறைக்கு ரூ. 282 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக சிறைத்துறைக்கு 282 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டசபையில் 2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
சென்னை: தமிழக சிறை துறைக்கு 282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதில் காவல்துறையினருக்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
அதன்படி, 49 காவல் நிலையங்கள் கட்டுவதற்கான ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையை நவீனமயமாக்குவதற்காக ரூ. 47.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
மேலும், சிறைத்துறைக்கென ரூ. 282 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர் என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
Comments
English summary
Rs. 282 crore allocated for Prison department in Tamil Nadu budget 2017-18.
Story first published: Thursday, March 16, 2017, 11:50 [IST]