For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

150 கிராம் தங்கம் கடத்தி வந்த 10 விமான பயணிகளுக்கு ரூ. 4.50 கோடி அபராதம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிங்கப்பூரிலிருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர்களில் 10 பேர் 150 கிராம் வரை தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பத்து பேருக்கும் தலா ரூ. 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தற்போது சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பயணிகள்

சிங்கப்பூர் பயணிகள்

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து 3 விமானங்கள் வந்தன.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

இந்த விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினரும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

27 பயணிகளிடம் தீவிர சோதனை

27 பயணிகளிடம் தீவிர சோதனை

இந்த விமானங்களில் வந்த பயணிகளில் சந்தேகத்திற்கு இடமான 27 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

150 கிராம் தங்கம் சிக்கியது

150 கிராம் தங்கம் சிக்கியது

அப்போது 10 பேரிடம் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது. மொத்தமாக 150 கிராம் தங்கம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதிரடி அபராதம்

அதிரடி அபராதம்

இதையடுத்து 10 பேருக்கும் தலா ரூ. 45 லட்சம் என்று மொத்தமாக ரூ. நாலரை கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

English summary
CRI officials slapped a fine of Rs 4.50 cr on 10 flight passengers for gold smuggling in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X