For Daily Alerts
Just In
திருச்சி விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Recommended Video
முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை | திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்- வீடியோ
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியாவிலிருந்து வந்த விமானத்திலிருந்து வந்தவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் மஜ்துனிசா என்ற பயணியிடம் 1,299 கிராம் தங்கத்தை மலேசியாவிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மலேசியாவிலிருந்து யாரிடமிருந்து தங்கம் கொண்டுவரப்பட்டது? திருச்சியில் யாரிடம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது? இந்த தங்கம் கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்பன குறித்தெல்லாம் மஜ்துனிசாவிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
English summary
Customs officials have been inspecting passengers at the Tiruchirapalli airport. It was revealed that a passenger was carrying 1,299 grams of gold from Malaysia. Their value is said to be Rs 40 lakh. Officers who seized kidnapping gold have been investigating.
Story first published: Wednesday, June 6, 2018, 11:01 [IST]