விஜயதசமி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - மதுரையில் 8ஆம் தேதி செல்லூர் ராஜூ தொடக்கி வைக்கிறார்
சென்னையில் ஓபிஎஸ் அனுமதியுடன் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பிறகு மதுரையில் வரும் 8ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜ் துவக்கி வைக்கிறார்.
மதுரை: மதுரையில் வரும் 8ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.
1925ல் விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் நாடு முழுவதும் ஊர்வலம் நடத்தியது.
கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று தற்போது ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காக்கி வண்ண அரைக்கால் சட்டை அணிந்து அணி வகுப்பு நடத்துவதுதான் நீண்ட கால நடைமுறை. பேரணியில் செல்பவர்கள் அரைக்கால் சட்டை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை அணிந்துதான் செல்ல வேண்டும்.
பேரணியின்போது கையில் லத்தி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. கூடாது. போலீஸார் விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, என்ற நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு முதல்வராக இருந்தா ஓபிஎஸ் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலங்கள் நடைபெற்றது. விஜயதசமி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நிறைவடைந்தது.
திருப்புத்துாரில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஜில்லா சங்க சாலக் ராமசாமி தலைமை வகித்தார். ஊர்வலம் தபால்நிலையம் அருகில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் வரும் 8-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. இதை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கீ வைக்க உள்ளார்.