For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை மறியல் செய்த மக்கள் - விபத்தில் சிக்கியும் பேச்சுவார்த்தை நடத்த வந்த பெண் ஆர்.டி.ஓ!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாகனம் விபத்துக்குள்ளானாலும் பஸ்ஸில் வந்த பெண் ஆர்.டி.ஓவால் சாலை மறியல் செய்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

2013 ஆம் ஆண்டு செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிறையில் அடைக்கப்பட்டவர் செங்கத்தை சேர்ந்த ரத்தனிம்.

அவர் சிறையிலேயே திடீரென்று உயிரிழந்துவிட்டதாக அவரது உடலை உறவினர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக செங்கம் - அரூர் அடுத்த நீப்பத்துறை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர்.

இதனை அறிந்த திருவண்ணாமலை ஆர்.டி.ஓ உமாமகேஸ்வரி உடனே அங்கு விரைந்தார். ஆனால் அவர் சென்ற அரசு வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் நுழைந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவ்வித காயங்களும்மின்றி தப்பிய உமாமகேஸ்வரி, அதனையும் பொருட்படுத்தாமல் சாலைமறியல் நடைபெற்ற இடத்திற்கு தனியார் பேருந்தில் சென்று சமரசம் செய்தார். இவர் பணியை கண்ட பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

English summary
Thiruvannamalai RTO came to the riot place after she met with an accident, people surpriced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X