For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் புதிதாக தேர்தல் ஐ.ஜி: எஸ்.என். சேஷாயி நியமனம்- 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இதில் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எஸ்.என்.சேஷாயி, சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எஸ்.என்.சேஷாயி, சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த டி.ஐ.ஜி, என்.கே.செந்தாமரைக்கண்ணன், சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஜேயேந்திர எஸ்.பிதாரி, மதுரை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன், மைலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மைலாப்பூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்க உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எஸ்.ஆர்.செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. யாக மாற்றப்பட்டு உள்ளார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பி.கண்ணம்மாள், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்று உள்ளார். ஆக மொத்தம் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamilnadu government has appointed S.N.Shesai has Inspector General of police for elections in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X