அடித்தவன் பீஹாரி.. அடிபட்டவன் மலையாளி.. போராட்டம் நடத்துபவன் தமிழன்.. எஸ்.வி.சேகரால் சலசலப்பு
சென்னை: சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள டிவீட்டால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
மாடுகளை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குரூப் அடித்து தாக்கியது.
படுகாயமடைந்த சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு டிவீட் போட்டுள்ளார்.
ஐஐடியில் அடித்தவன் பீஹாரி. அடிபட்டவன் மலையாளி. போராட்டம் நடத்துபவன் தமிழன்.👍
— S.VE.SHEKHER (@SVESHEKHER) June 1, 2017
அந்த டிவீட்டில் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.