தேசியக் கொடியை எங்க கொண்டு போய் வைத்திருக்கிறார் பாருங்க "தலைமறைவு" எஸ்.வி.சேகர்!
தேசியக் கொடியை சட்டையின் கீழ்ப்பகுதியில் குத்தி அதன் மீதான மரியாதையை சீர்குலைத்துள்ளார் எஸ் வி சேகர்.
Recommended Video
சென்னை: எப்போதும் கம்பீரமாக நெஞ்சில் தேசியக் கொடியை குத்தியிருக்கும் எஸ் வி சேகர் தற்போது சட்டையின் கீழ்பகுதியில் ஒரு ஓரத்தில் குத்தியுள்ளார்.
சென்னையில் ஆளுநர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் நிருபரின் கன்னத்தை ஆளநர் தட்டினார். இதற்கு அந்த பெண் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் நிருபரிடம் வருத்தம் தெரிவித்தார் ஆளுநர்.
இந்நிலையில் ஆளுநருக்கு ஆதரவு தருகின்ற பேர் வழி என்ற பெயரில் பெண் நிருபர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு கருத்து பரப்பினார். இதற்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டன.
நிருபர்கள்
எஸ்வி சேகரை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வலம் வருகிறார்.
3 தினங்களுக்கு
தி நகரில் நடைபெற்ற விழாவில் எஸ் வி சேகர் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சேகர் கலந்து கொண்டார். இதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்பும் எஸ் வி சேகர் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று தாம்பரம் படப்பை அருகே ஒரு ஹோட்டலில் சாப்பிட எஸ்வி சேகர் சென்றார். அவருக்கு துணையாக ஆயுதம் ஏந்திய போலீஸார் இருந்தனர்.
தேசியக் கொடி
அப்போது எஸ் வி சேகர் எப்போதும் சட்டை பாக்கெட்டில் குத்தியிருக்கும் தேசியக் கொடியை இன்று சட்டை முடிவில் ஒரு ஓரமாக குத்தியிருந்தார். இது காண்போருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. தேசியக் கொடிக்கென்று மரியாதை கொடுக்காமல் நினைத்த இடத்தில் கொடியை குத்தியுள்ளாரே என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதானா நாட்டு பற்று
தன்னை கைது செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை எஸ்வி சேகர் பொருட்படுத்தவில்லை. சட்டத்தையும் மதிக்கவில்லை. நாட்டு பற்று , தேசப்பற்று என்று வியாகியானம் பேசும் சேகர் தற்போது கொடியை அவமதிக்கும் வகையில் சட்டையின் கீழ் குத்தியுள்ளது அவமானப்படுத்தும் செயலாகும். தன்னை போலவே தேசியக் கொடியை மறைத்து குத்திக் கொண்டார் எஸ் வி சேகர்.