பார்ரா.. எஸ்.வி.சேகருக்கு எம்புட்டு சந்தோஷம்!
பாடகி சின்மயி ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் எழுதி வருவதை தொடர்ந்து, நடிகர் எஸ்.வி சேகர் டிவிட்டரில் சந்தோசமாக போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பாடகி சின்மயி ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் எழுதி வருவதை தொடர்ந்து, நடிகர் எஸ்.வி சேகர் டிவிட்டரில் சந்தோசமாக போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்.
இந்தியா முழுக்க தற்போது ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து மறைமுகமாக பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தன் வினை தன்னைச்சுடும்”. “தெய்வம் நின்று கொல்லும்”. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. “சொந்த காசுல சூன்யம்”.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) October 9, 2018
இன்றய அரசியல் பலா பலன்கள். யாருக்கு எதுன்னு சொல்லுங்க. 😜😜😜😜😜😜😂😂😂😂😂😂
அதில், "தன் வினை தன்னைச்சுடும்". "தெய்வம் நின்று கொல்லும்". "தீதும் நன்றும் பிறர் தர வாரா". "சொந்த காசுல சூன்யம்". இன்றைய அரசியல் பலா பலன்கள். யாருக்கு எதுன்னு சொல்லுங்க. , என்றுள்ளார்.
அவரது இந்த கருத்து பெரிய வைரலாகி உள்ளது. அதேபோல் இவர் சின்மயி வெளியிட்ட அனைத்து டிவிட்டுகளையும் ஷேர் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி சேகர் தவறாக பேசி சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.