பெரம்பலூரில் புதிய சாலைக்கு உதவும் சச்சின்.. எம்.பி நிதியில் இருந்து உதவி!
பெரம்பலூரில் புதிய சாலை அமைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி நிதியில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார்.
சென்னை: பெரம்பலூரில் புதிய சாலை அமைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி நிதியில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் ஊராட்சியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு உதவ முன்வந்துள்ளார் ராஜ்யசபா, எம்.பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இதற்காக தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21.70 லட்சம் பணம் அளிக்க உள்ளார். பெரம்பலூரில் கோல்டன் சிட்டியில் உள்ள பகுதியில் தார் சாலை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அந்த நிதியில் மொத்தமாக 500 மீட்டர் நீளத்திலும் 3.75 மீட்டர் அகலத்திலும் சாலை அமைக்கப்படும். தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு அடுக்காக தார் சாலை போடப்படும். சாலை பணியை, பெரம்பலுார் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்து வருகிறார். இந்த சாலை போடப்பட்ட பின் சச்சின் இதை பார்வையிட வாய்ப்புள்ளது.