நிலாவில் பாபா முகம்.. சென்னை நகர வீதிகளில் கூடிய மக்கள்!
சென்னை நகரில் பாபா முகம் நிலாவில் தெரிவதாக பரபரப்பு செய்தி பரவியது.
சென்னை: நிலாவில் பாபா முகம் தெரிவதாக வந்த செய்தியால் சென்னையே நேற்றிரவு பரபரப்பாகி போனது.
நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாகவும், அதில் பாபா நம்மை பார்க்கிறார் எனவும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் சென்னை நகர பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
கையில் டெலஸ்கோப்
இந்த தகவலுடன் அது நம்பக்கூடிய வகையில் நிலவில் பாபா முகம் போன்ற உருவ புகைப்படமும் கூடவே பரவியது. அதனால் 9 மணி அளவில் இப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டை வெளியே வந்தனர். பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர்
பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் நிலாவை பார்த்தனர்.
ஆமாம்... பாபா தெரிகிறார்
அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்துவிட்டனர். தங்கள் மனசுக்கு பிடிச்ச கடவுளை மனதில் நினைத்து கொண்டு பார்த்தால் அவர்களது முகம் நிலாவில் இருப்பது போல் தோன்றும் என்று இதற்கு சிலர் விளக்கமும் கொடுத்தனர்.
பாட்டி வடை சுடவில்லை
கடந்த 2014-நாசா நிலவிலிருந்து ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு உருவத்தின் நிழல் நடமாடியது தெரியவந்தது. ஆனால் அது யார் என்றுதான் இதுவரை தெரியவில்லை. ஆனால் பாட்டி வடையை எப்போதுமே சுடவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இதைவிர
நிலாவில் உண்மையில் நிலாவில் யார்தான் இருக்கிறார்கள் என்று இப்போதுவரை தெரியவில்லை.
நிலாவுக்கே வெளிச்சம்
நேற்றிரவு நிலாவில் சாய்பாபா தெரிகிற சம்பவம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. சென்னை நகர வீதிகளில் கூடிய மக்களால் அதுவரை பரபரப்பும் நீடித்தது. சென்னை மட்டுமில்லை, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் இந்த தகவல் பரவியது. அதற்கு பின்னர் நிலா மேகத்துக்குள் ஓடி மறைந்துவிட்டது. உண்மையிலேயே நிலாவில் பாபா முகம் தெரிந்ததா? தெரியவில்லையா? அந்த "நிலாவுக்கே வெளிச்சம்"!