சேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு.. சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல்
சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகளை போலீஸ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.
ஆனால் நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்த சாலைக்கு எதிராக தற்போது சட்டப்போராட்டமும் தொடங்கியுள்ளது.
சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களை அனுமதியின்றி சாலை போடப்படுகிறது, இந்த சாலையால் எந்த பயனும் இல்லை, மக்களுக்கு மிகவும் குறைந்த பட்ச பணமே கொடுக்கப்படுகிறது, மக்கள் மிரட்டப்படுகிறார்கள், சாலை போட வேண்டும் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.