8 வழி சாலைக்கு எதிர்ப்பு-செங்கத்தில் போலீஸ் முன் திடீரென பாழடைந்த கிணற்றில் குதித்த விவசாயி!
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
Recommended Video
சேலம்: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை தொடர்ந்து வயதான மூதாட்டியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகளை போலீஸ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.
சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி இப்போது விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை நிலத்தை கொடுக்க மனமில்லாமல் தற்கொலை செய்ய முயற்சித்து வருகிறார்கள்.
அதன்படி தற்போது செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை தொடர்ந்து வயதான மூதாட்டியும் கிணற்றில் குதிக்க முயற்சி செய்துள்ளார். அவர்களை போலீஸ் உயிருடன் மீட்டுள்ளது.
விவசாயிகளை காப்பாற்ற போலீசாரும் கிணற்றில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயியை மீட்க பாழடைந்த கிணற்றில் போலீஸ் கயிற்றை இறக்கியது. இதையடுத்து தற்போது விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. செங்கம் பகுதியில் உள்ள கிணறுகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.