For Daily Alerts
Just In
பணி நேரத்தில் பனியன், லுங்கியுடன் தூக்கம்.. 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் எஸ்.பி அதிரடி
பணியின்போது ஹாயாக தூக்கம் போட்ட சேலம் போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் உத்தரவிட்டுள்ளார் சேலம் மாவட்ட எஸ்பி. இது போலீசாரை பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்: சேலம் சென்னை நெடுஞ்சாலை ரோந்து படையினர் 3 பேர், பணி நேரத்தில்,சாலையோரம் உள்ள பள்ளி பள்ளி வளாகத்தில் அயர்ந்து தூங்கியதும் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் போலீசார்,சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேசன்சாவடி பகுதியில் இருக்கும் சாரண, சாரணியர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு தினசரி மதிய வேளையில், வரும் ரோந்து போலீசார் 3 பேர் தங்கள் சீருடைகளை கழட்டி விட்டு லுங்கி மற்றும் பனியனுடன் படுத்து உறங்குகின்றனர் என்று புகார்கள் வந்தன.
இதனையடுத்து அதை உறுதி செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 3 பேரையும் ஆயுதப் படைப்பிரிவுக்கு இடமாறுதல் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Three policemen got suspended in Salem for sleeping on duty. All the three policemen caught while they parked patrol vehicle in a school and slept.
Story first published: Thursday, May 4, 2017, 14:51 [IST]