சேலம் இரும்பாலை தனியார்மய விவகாரம்.. தமிழக அரசு உறங்குவதா? ராமதாஸ் காட்டம்
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்காமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருக்கிறதா என்று மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மிக வேகமாக எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்காமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருக்கிறதா என்று மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் செய்யும் மத்திய அரசு தமிழகத்தின் நலன்களை பறிக்கும் திட்டங்களை மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதற்கான அண்மைக்கால உதாரணம் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவு ஆகும். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசு உத்தரவு:
சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜுலை 25-ம் தேதி அன்று அறிக்கை வெளியிட்ட நான்இ இந்த முயற்சியை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும்இ அரசும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனாலும்இ தமிழகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் 51மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் விஷ்ணுதியோ சிங் நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்திருந்த பதிலில் கூறியிருந்தார்.
கொள்கை அடிப்படையில் ஒப்புதல்:
அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் வேகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த 24 மணி நேரத்தில்இ பங்கு விற்பனை குறித்த தகவலை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்புக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சேலம் இரும்பாலை மட்டுமின்றிஇ பத்ராவதி இரும்பாலைஇ துர்காப்பூர் இரும்பாலை ஆகியவற்றின் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்குகளை வாங்கும் நிறுவனம் 2 கட்ட ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படவிருப்பதாக செபி அமைப்பிடம் மத்திய அரசின் சார்பில் இந்திய எஃகு நிறுவனம் (ஷிகிமிலி) அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திசம்பர் மாதம் தொடங்கி அடுத்த சில வாரங்களில் இரு கட்ட ஏலங்களும் நடத்தி முடிக்கப்பட்டுஇ சேலம் இரும்பாலை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
பங்கு விற்பனை:
தொழிலாளர்களும் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால்இ இந்த எதிர்ப்புகளையெல்லாம் மதிக்காமல் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தவறியது தான்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 8-தேதி அன்று நடைபெற்ற தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயமாக்க முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போதுஇ அவற்றை ரூ.358.20 கோடிக்கு தமிழக அரசே வாங்கி அவை தனியாரின் கைகளுக்கு செல்வதைத் தடுத்தது.
நடவடிக்கைகள் தீவிரம்:
அதேபோல், சேலம் இரும்பாலை நிர்வாகமும் தனியாரின் கைகளுக்கு செல்வதை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார்'' என்று கூறினார். ஆனால், அதற்காக தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததன் விளைவாகத் தான் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறை என்பது இவ்வளவு தான்.
சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே தனியாருக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கூறுவது தவறாகும். இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால்இ தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே சேலம் இரும்பாலை நஷ்டமாக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
தற்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும்.
தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடுக:
சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். மேலும்இ சேலம் ஆலையில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களையும் இந்த நடவடிக்கை பாதிக்கும்.
எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டுஇ ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவும் தில்லி சென்று பிரதமரை சந்தித்து சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்படி வலியுறுத்த வேண்டும்.
இதற்கு பிறகும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக சேலம் பகுதியுள்ள மக்களையும், இரும்பாலை தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.