”ஃபுல்” போதையில் மைனர் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி - சேலத்தில் வாலிபர் கைது
சேலம்: சேலத்தில் குடித்துவிட்டு போதையில் இளம் பெண்ணிடம் அத்து மீறி நடந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி, கன்னப்பாடியை சேர்ந்த வெள்ளையன் மகன் முனிரத்தினம். இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினத்தின் உறவினர் மகளான 17 வயதான பெண் ஒருவர் அவ்வழியாக தோட்டத்துக்கு சென்றுள்ளார். இதை பார்த்த முனிரத்தினம் அப்பெண்ணை கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு வந்து ஆசைக்கு இணங்கும்படி கூறி சில்மிஷம் செய்துள்ளார்.
அதற்கு உடன்படாத அப்பெண் சத்தம் போட்டுள்ளார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு முனிரத்தினத்தின் தந்தை வெள்ளையன் ஓடிவந்து பெண்ணை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், தன்னுடைய வீட்டுக்குச் சென்ற அந்த பெண் அவருடைய பெற்றோகளிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோர்கள் இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் முனிரத்தினத்தை கைது செய்துள்ளனர்.