For Daily Alerts
Just In
தரம், அளவு சரியா இருக்கா? - சேலம் பெட்ரோல் பங்குகளில் ஆய்வு - வீடியோ
பெட்ரோல், டீசல் விநியோக அளவுகளில் மோசடி செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம்: நாடு முழுவதும் உள்ள அனைத்து பங்குகளையும் சோதனையிட பெட்ரோலிய துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துஸ்தான் நிறுவன பெட்ரோல் பங்குகளில் கடந்த சில நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் 5 ரோட்டில் உள்ள அந்நிறுவன பங்க் ஒன்றில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் (திட்டம்) சுப்ரமணியன், ஏரியா துணை மேலாளர் (விற்பனை) கிஷன்குமார் ஆகியோர் அந்த பெட்ரோல் பங்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசலின் அளவு சரியாக உள்ளதா?, பம்புகளில் சிப் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா?, கலப்படம் ஏேதனும் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். பெட்ரோல், டீசல் தரத்தினை சோதனை செய்தனர்.
Comments
English summary
The petrol pump chip scam could extend beyond Lucknow, with the Uttar Pradesh.Quality and Quantity are maintained at Retail Outlets checking in Salem petrol pumbs.
Story first published: Saturday, May 6, 2017, 17:26 [IST]