For Daily Alerts
Just In
தனியார் பேருந்து மீது மணல் லாரி மோதல்: 20 பேர் காயம்
கரூர்: கரூா் அருகே மணல் லாரியும், தனியார் ஏற்றுமதி நிறுவன பேருந்தும் மோதிய விபத்தில் 20 போ் காயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஏற்றுமதி நிறுவன ஊழியா்களை ஏற்றிகொண்டு சென்றுகொண்டிருந்தது.
கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது திடீரென மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் காயங்களுடன் உயிர் தப்பினா்.
தகவல் அறிந்த வாங்கல் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை கரூா் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வருகின்றனா்.
Comments
English summary
A sand ladden lorry clashed with a private bus near Karur and 20 persons were injured.
Story first published: Thursday, October 16, 2014, 16:02 [IST]