For Daily Alerts
Just In
திருத்தணி கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேர் கைது
திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி: திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேரை திருவள்ளூர் காவல் துறை கைது செய்தனர்.
கனகம்மாசத்திரத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.சக்கரவர்த்தி நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த டிராக்டரை மடக்கி பிடித்த போது கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்களும், ஒரு ஜேசிபியும் பறிமுதல் செய்தனர்.
Comments
English summary
Sand Mafia who robs sand in Kosasthalai river. 6 were arrested. 3 tractors and 1 JCB were seized.
Story first published: Sunday, September 24, 2017, 8:41 [IST]