For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் அப்பீல்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜாதி ஆணவத்தால் உடுமலைப்பேட்டை சங்கரை படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 2015-ம் ஆண்டு தம்முடன் படித்த சங்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை கவுசல்யாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

Sankar Murder Case: Kausalya’s Father appeals against death sentence

இதையடுத்து 2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் கவுசல்யா உயிர் பிழைத்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு அண்மையில் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சின்னச்சாமி உட்பட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கில் தீர்ப்பளித்திருந்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Sankar murder case, kausalyas's father and six others appealed in Madras High Court against their Death sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X