'அம்மாவாகிய சின்னம்மா..' ஜெயலலிதாவின் கார், இருக்கையை பயன்படுத்திய சசிகலா!
சசிகலா ஏறத்தாழ ஜெயலலிதாவை போலவே தன்னை வெளிக்காட்ட விரும்பியது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரியவருகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.
சசிகலா ஏறத்தாழ ஜெயலலிதாவை போலவே தன்னை வெளிக்காட்ட விரும்பியது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரியவந்தது. ஏனெனில் ஜெயலலிதா இதுவரை எந்த எஸ்.யூ.வி வகை காரை பயன்படுத்தினாரோ அதே, காரில்தான் சசிகலா கட்சி அலுவலகம் வந்தார்.
மேலும், கட்சி அலுவலகத்தில், ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கையில்தான் சசிகலா அமர்ந்தார். அங்கு அமர்ந்தபடி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை போன்ற அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.