For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையெழுத்து இல்லாமல் வெளியான சசிகலாவின் அறிக்கை... போட மறந்துட்டாரோ?

ஜல்லிக்கட்டு தொடர்பாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வெளியான சசிகலாவின் அறிக்கையில் அவரது கையெழுத்தை காண முடியவில்லை.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சசிகலா புத்தாண்டு வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டார். இன்று சிவகுமாரின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் சசிகலாவின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.

இன்று ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் பேச்சு உண்மைக்கு புறம்பானது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சட்ட போராட்டங்களை ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் சசிகலா.

Sasikala fails to add her signature in the statement

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டார். ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஏதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவது பொறுப்பானது அல்ல. எனவே அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூடியிருந்தார் சசிகலா.

கடைசியில் அவருடைய கையெழுத்து போடவில்லை. ஒருவேளை அவசரத்தில் போட மறந்து விட்டாரா? அவருக்கு தெரியாமல் அறிக்கை எதுவும் வெளியாகிவிட்டதா?

English summary
Sasikala's statement has come without her signature in the party statement issued today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X