அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார்! உற்சாகத்தை தொலைத்த தொண்டர்கள்!!
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் இன்று பதவியேற்றார். அதிமுக அலுவலகத்தில் மிக குறைவான எண்ணிக்கையிலே வந்திருந்த தொண்டர்கள் உற்சாகத்தை இழந்தவர்களாக இருந்தனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் இன்று பதவியேற்றார். அதிமுக அலுவலகத்தில் மிக குறைவான எண்ணிக்கையிலே வந்திருந்த தொண்டர்கள் உற்சாகத்தை இழந்தவர்களாக இருந்தனர்.
ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றார். அதிமுக பொதுச்செயலர் யார்? என்கிற கேள்வி எழுந்தது.
அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க முயற்சித்தனர். ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார். இதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே சசிகலா வந்தார்.
Chennai: Sasikala Natarajan reaches AIADMK office, will take charge as General secretary of the party shortly pic.twitter.com/Kzy07aEUYR
— ANI (@ANI_news) December 31, 2016
தம்மை ஒரு ஜெயலலிதாவாக உருவத்திலும் செயலிலும் காட்டிக் கொள்ளும் செயற்கைத்தனத்தை சசிகலாவிடம் பார்க்க முடிந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் குறைவாகவே தொண்டர்கள் கூட்டம் இருந்தது. அவர்களிடத்திலும் பெரிய அளவிலான உற்சாகம் கரைபுரண்டோடவில்லை.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்த அதே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் என்பவர் ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.