For Quick Alerts
For Daily Alerts
Just In
எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மரியாதை.. நூற்றாண்டு மலரை வெளியிட்டார்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார்.
சென்னை: எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, ராயப்பேட்டையிலுள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள், 104 பேருக்கு சசிகலா தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்தார்.
Comments
English summary
AIADMK G.S. Sasikala pays tribute to M.G.R statue at party head office in Chennai.