சென்னையில் நான் மசாஜ் பார்லர் நடத்தவே இல்லை... என் பேக்ரவுண்டே வேற... சசிகலா புஷ்பா
சென்னைக்கு வந்து தாம் முதலில் மசாஜ் பார்லர் நடத்தப்பட்டதாக கூறும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என மறுத்துள்ளார் சசிகலா புஷ்பா.
சென்னை: சென்னையில் தாம் மசாஜ் பார்லர் நடத்தியதாக வந்த அத்தனை செய்திகளுமே பொய்யானது..என்னுடைய பேக்ரவுண்டே வேற என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா தம்மை அடித்துவிட்டதாக ராஜ்யசபாவில் புகார் தெரிவித்தவர் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
சென்னை மசாஜ் சென்டர்
பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. அப்போது, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலா புஷ்பா மசாஜ் சென்டர் நடத்திக் கொண்டிருந்தார் எனவும் கூறப்பட்டது.
அமைச்சர்கள் தொடர்பு
இந்த மசாஜ்சென்டருக்கு அமைச்சர்கள் பலரும் வந்து போகிறார்கள் எனவும் கூறப்பட்டு வந்தது. அத்துடன் சசிகலா புஷ்பா மீது அவரது வீட்டு பணிப் பெண்களே புகார் கொடுத்தனர்.
நிர்வாண மசாஜ் புகார்
அதில், சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும் நிர்வாண மசாஜ் செய்ய வலியுறுத்தினர் என அந்த பெண்கள் குற்றம்சாட்டினர். பின்னர் அரசியல் சக்திகளின் தூண்டுதலில் இந்த புகார் கொடுத்ததாக அந்த பெண்கள் பல்டியும் அடித்தனர்.
ஆசிரியர் குடும்பம்
இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு சசிகலா புஷ்பா பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சசிகலா புஷ்பா, அப்படியான எந்த ஒன்றையும் நான் நடத்தவில்லை. நான் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் வந்திருக்கிறேன். நானே ஒரு ஆசிரியர். எங்களுடைய பேக்ரவுண்ட் என்பதே வேறு என விளக்கம் அளித்தார்.