சசிகலா அண்ணன் மகன் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பெண் பலி
தஞ்சை: சசிகலாவின் அண்ணன் மகனுக்கு சொந்தமான பேருந்து ஒன்று, தஞ்சாவூர் அருகே அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது அண்ணன் விநோதனின் மகன் மகாதேவன். அதிமுக பிரமுகரான இவருக்கு சொந்தமான பேருந்துகள், தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
மகாதேவனின் போக்குவரத்து நிறுவனப் பேருந்துகள் அ வேகமாக இயக்கப்படுவதாகவும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை என்றும் பயணிகள் ஏற்னவே புகார் தெரிவித்துள்ளனர். மற்றப் பேருந்துகள் மகாதேவனின் போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளை முந்திச் சென்றால், பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற கொண்டிருந்த மகாதேவனின் பேருந்து, சூரக்கோட்டை என்ற இடத்தில் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் தலை நசுங்கி இறந்ததுடன், 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பேருந்தை அதிவேகமாக இயக்கியதே, விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.