திவாகரனுக்கு சசிகலா சார்பில் நோட்டீஸ்- பெயர், படம் பயன்படுத்த எதிர்ப்பு!
சென்னை: தமது பெயரையோ படத்தையோ பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சார்பில் அவரது சகோதரர் திவாகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினகரனின் தனிக் கட்சி ஆவர்த்தனத்தால் சசிகலா குடும்பத்தில் உச்சகட்ட மோதல்கள் வெடித்துள்ளன. தினகரனை துரோகி என்கிறார் திவாகரன்.. திவாகரனை மனநிலை சரியில்லாதவர் என்கிறார் தினகரன்.
இந்த அக்கப்போரின் அடுத்த கட்டமாக திவாகரனுக்கு சசிகலாவின் பெயரில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் சசிகலா பெயரையோ புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
திவாகரனுக்கு சசிகலா சார்பில் நோட்டீஸ்- பெயர், படம் பயன்படுத்த எதிர்ப்பு! #divakaran #sasikala pic.twitter.com/hoR4lgWRfZ
— Oneindia Tamil (@thatsTamil) May 11, 2018
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிலும் இரட்டை இலை வழக்குகளிலும் சசிகலா, தினகரன் சார்பாக ஆஜராகி வருபவர் ராஜா செந்தூர்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது,