இங்குதான் தங்கப் போகிறார் சசிகலா... பேனர் வைத்து வரவேற்ற இளவரசி மகள்
ஐந்து நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் இளவரசியின் மகள் வீட்டில் தங்கப் போகிறார்.
Recommended Video
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, சென்னையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கப்போகிறார். சசிகலாவை வரவேற்க சென்னையில் உள்ள இளவரசி மகள் வீட்டு முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி உள்ளது.
சிறையில் இருந்து வெளியாகும் சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அவை முடிந்த பின் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.
பச்சை புடவை கட்டி காரில் வந்த சசிகலா இன்று மாலை சென்னை வருகிறார். சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்குகிறார். இதனை அடுத்து தி. நகரில் இளவரசி வீடு முன்பாக சசிகலாவை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.