ஜெ. மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள்- நெருக்கும் சொத்து விவகாரங்கள்- மன உளைச்சலில் சசிகலா!!
தொடரும் மரணங்கள், நெருக்கும் சொத்து விவகாரங்களால் மன உளைச்சலில் இருக்கிறாராம் சசிகலா.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தில் மரணங்கள் தொடருகின்றன. இன்னொரு பக்கம் சொத்து விவகாரங்கள் நெருக்குகின்றன. இதனால் சசிகலா கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
சசிகலா குடும்பத்தில் மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன் என அடுத்தடுத்த மரணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வருடமாக கோலோச்சிய கட்சியும் கைவிட்டுப் போய்விட்டது.
தனி அமைப்பு தொடங்கினாலும் டெல்லியின் நெருக்கடிகள் கூடிக் கொண்டே போகிறது. ' மொத்தத்தில் நமது குடும்பத்துக்கு சூழல்கள் சரியில்லை. பரிகாரம் செய்ய வேண்டும்’ என சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்டு பேசிய சசிகலா, ' இங்கு இருந்தாலே மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. சிறை வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை. எப்போது சிறைக்குப் போவோம் என நினைக்கத் தோன்றுகிறது’ எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலை சொந்தக்காரர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சொத்து விவகாரம், நடராஜன் வகையறாக்களின் ஆட்டம் என கூடுதல் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. அதன் விளைவாகத்தான் மருத்துவர்கள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவேதான், பரோலுக்கு முன்பாகவே சிறைக்குச் செல்லும் முடிவை அவர் எடுத்தார்” என்றார் விரிவாக.