For Daily Alerts
Just In
ஒரு ஆள் கூட இல்லை: வெறிச்சோடிக் கிடக்கும் சத்யமூர்த்தி பவன்
சென்னை: வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவன் வெறிச்சோடிக் கிடந்தது.
நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.
நாடே வாக்கு எண்ணிக்கையை பரபரப்புடன் கவனித்து வந்த வேளையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஒரு கட்சி தொண்டரோ, தலைவரோ இல்லை.
இதனால் பரபரப்பான நாளில் சத்யமூர்த்த பவன் வெறிச்சோடி காணப்பட்டது.
Comments
lok sabha election 2014 election result 2014 congress லோக்சபா தேர்தல் 2014 தேர்தல் முடிவுகள் 2014 காங்கிரஸ்
English summary
Congress office in Chennai looked deserted as not a single party worker or leader was seen there.