பராமரிப்பு வேலைகள் காரணமாக ரயில்களின் நேரங்களில் மாற்றம்
பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 5 ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று 5 ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் தொடங்கி நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் வரை நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு ரயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. அதேபோல் ரயில்களும் நாளை பராமரிக்கப்பட இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இயங்கும் ஐந்து முக்கிய ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இன்று காலை 7.15க்கு புறப்பட கூடிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்
மேலும் சென்னையில் இருந்து காலை 6.10க்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் காலை 8.25க்கு புறப்படும். நெல்லையிலிருந்து காலை 7.20க்கு புறப்பட கூடிய தாதர் விரைவு ரயில் 8.50க்கு புறப்படும்.
இந்த நேர மாற்றம் இன்று மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து இருக்கிறது.