For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலமாக்களுக்கு உதவித்தொகை ரூ.1500-ஆக அதிகரிப்பு... தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அரசு உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களில் பணியாற்றும் அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையாக ரூ.1,000 மற்றும் திருமண உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என உலமாக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Scholarship for Ulama to be increased to Rs.1500 from Rs.1000

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலத்திட்டம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது உலமாக்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ1000-ல் இருந்து ரூ1,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

English summary
Scholarship for Ulama to be increased to Rs.1500 from Rs.1000 has been announce in Tamil Nadu Budget session by Finance Minister O. Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X