For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலிக்க மறுத்த மாணவி..பிளேடால் கழுத்தை அறுத்த 11-ம் வகுப்பு மாணவன்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுகல் அருகே உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை 11-ம் வகுப்பு மாணவன் பிளேடால் அறுத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலிக்க மறுத்த மாணவியை 11- ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தானும் பிளேடால் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல், நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

school girl attacked by 11th student for one side love

இந்நிலையில் இன்று காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். இதனிடையே நத்தம் பேருந்து நிலையத்தில் வைத்து மாணவியை வழி மறுத்துள்ளார் அந்த மாணவர், பின்னர் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு இதற்கு அந்த மாணவி மீண்டும் மறுக்கவே ஆத்திரமடைந்த 11-ம் வகுப்பு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

பின்னர் தானும் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் பள்ளி மாணவி, மாணவன் பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
school girl attacked by 11th student for one side love. The student has cut her neck with blade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X