For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பம்: தோழி இறந்ததால் துக்கம்... மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Google Oneindia Tamil News

கம்பம்: தோழியின் மரணத்தால் மனமுடைந்த பிளஸ் -2 மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி செல்லமணி. இவரது மகள் மதுமிதா(16), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் - 2 படித்து வந்தார். மதுவிதாவின் நெருங்கிய தோழி லாவண்யா.

தோழிகள் இருவரும் பள்ளி உட்பட அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே இருப்பார்களாம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை காரணமாக லாவண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

உயிர்த் தோழியின் திடீர்ப் பிரிவால் மனமுடைந்த மதுமிதா, சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும் தனிமையில் இருந்த மதுமிதா துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Kambam in Theni district, a plus two committed suicide as her friend killed herself days before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X