5ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது
சென்னையில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியரைக் கைது செய்யக்கோரிப் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
சென்னை: சென்னை பெருங்குடியில் 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் 12வயது மாணவிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த குழந்தை முன்னரே இரண்டு முறை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றும் இதே போல அந்தகுழந்தை கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். நள்ளிரவில் தங்களின் குழந்தை அலறி எழும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
பெற்றோர் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடைத்து இதில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பள்ளியின் முன்பு 50க்கும் மேற்பட்டோர் தலைமையாசிரியரை கைது செய்ய வேண்டும்என்று கூறி முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.