For Quick Alerts
For Daily Alerts
Just In
திருப்பூர் அவினாசி அருகே 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மர்மநபர்கள்
திருப்பூரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அவினாசி: திருப்பூரில் பள்ளிச் சென்று கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை மர்மநபர்கள் அறுத்தனர். இதையடுத்து அவர் அவினாசியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் அவினாசி நம்பியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர் மாணவி காயத்ரியை வழிமறித்து அவரது கழுத்தை அறுத்தனர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்த மாணவி அவினாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Comments
English summary
A 6th standard girl student got slit in throat by some unknown while she was going to school. Now she is admitted in Avinasi Hospital.
Story first published: Monday, October 23, 2017, 12:40 [IST]