For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்!

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைதானார்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: பாத்ரூமில் கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரம், திடீரென வீட்டிற்குள் நுழைந்தார் காஞ்சனா.. பாடம் நடத்துவதாக சொல்லி பாலியல் அக்கிரமத்தை செய்த கார்த்திக் மீது, வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகாரும் தந்துள்ள சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செங்கல்பட்டு அடுத்துள்ளது பாலூர் மேலசேரி.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. 26 வயதாகிறது.. காஞ்சிபுரத்தில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறார்.

 School teacher arrested under posco near Chengalpat

அதே பகுதியில் வசித்து வருபவர் காஞ்சனா.. இவரது 14 வயது மகன், செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான்... தற்போது ஸ்கூல் லீவு என்பதால், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் சரத் சரியாக படிப்பதில்லை.. நடத்தும் பாடமும் சரத்துக்கு புரியவில்லை.. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காஞ்சனா வீட்டுக்கு சென்ற கார்த்திக், சரத்தை என் வீட்டுக்கு அனுப்புங்க, நான் பாடம் சொல்லி தரேன் என்று சொல்லி உள்ளார்.. இதையடுத்து காஞ்சனாவும் மகனை கார்த்திக் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் கார்த்திக் பாடம் நடத்தாமல், சரத்துக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்..இதனால் மிரண்டு போன சரத் மறுப்பு சொல்லியும், மிரட்டி தொல்லை கொடுத்து செக்ஸ் டார்ச்சர் தந்திருக்கிறார்.. அத்துடன் அதனை தன்னுடைய செல்போனிலும் வீடியோ எடுத்து வைத்து கொண்டார்.

 School teacher arrested under posco near Chengalpat

இதனிடையே சரத்துக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. பிறகு விசாரிக்கும்போதுதான் டியூஷனில் நடந்த அக்கிரமத்தை பற்றி சொல்லி கதறி அழுதான்.. இதனால் ஆத்திரமடைந்த காஞ்சனா, நேராக கார்த்திக் வீட்டுக்கு சென்றார்... அந்த நேரம் பார்த்து, கார்த்திக் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்.

6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..! 6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..!

உடனே செல்போனை பிடித்து, அதில் இருந்த ஆபாச வீடியோக்களை எடுத்து தன்னுடைய செல்போனுக்கு மாற்றிவிட்டார் காஞ்சனா.. அந்த வீடியோவையும் உடனே டெலிட் செய்துவிட்டு, தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.. பிறகு பாலூர் ஸ்டேஷனில் தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்தை காட்டி புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் கார்த்திகை போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளே தூக்கி வைத்தனர்!

English summary
School teacher arrested under posco near Chengalpat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X